விழுப்புரம் : நாய்களுக்கு இறையான இருபது ஆடுகள் பலி.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அருகில் உள்ள தும்பரமேடு என்னும் கிராமத்தில் ஆட்டுப்பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். 

இந்த பட்டியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. இந்நிலையில் கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான சுமார் பத்து நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து, அடைக்கப்பட்டு இருந்த சுமார் இருபது குட்டி ஆடுகள் மற்றும் நான்கு பெரிய ஆடுகளை கடித்துக் குதறியது. இதனால் அனைத்து கடிபட்ட அனைத்து ஆடுகளும் இறந்துவிட்டது. 

இது தொடர்பாக ஆறுமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆறுமுகம் கொடுத்த புகாரின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  விசாரணை செய்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நாராயணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near vilupuram dogs bite twenty goats died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->