புதிய வண்ண விளக்குகளுடன் 100 ரோந்து வாகனகள் -  சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெருநகர் காவல் துறையில் 354 காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களில் உள்ள 100 வாகனங்களுக்கு தனியார் வங்கியின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.75 லட்சம் செலவில் புதிய வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த புதிய வண்ண விளக்குகள் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதாக ரோந்து வாகனங்களை கண்டறியும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட 100 ரோந்து வாகனங்களை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கொடியை அசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன், கோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new colours light in Patrol vehicles


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->