அதிரடி காட்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள்!...அதிகாலை முதலே தொடங்கியது தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


தடை செய்யப்பட அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை  உள்ளிட்ட12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினரான என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, நீலாங்கரை, ஏழுகிணறு, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் இன்று அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officers showing action Intensive investigation started from early morning


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->