ஈரோடு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. அதன் படி, இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக மற்றும் தேசிய கட்சியான பா.ஜனதாவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சீமான் தெரிவித்து இருப்பதாவது:-

"வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி அவர்கள் போட்டியிட உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ntk announce candidate for erode by election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->