சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியதே கருணாநிதிதான் - சீமான்! - Seithipunal
Seithipunal


சண்டாளன் என்ற ஒரு சமூகம் இருப்பதே எனக்குத் தெரியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கலைஞருக்கு தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலை உருவாக்கியதே அதிமுக தான்.

அதிமுக மேடையில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒழிக்கப்பட்டுள்ளது, கலைஞர் குறித்து அதிமுக பல வருடங்களாக பாடிய பாடலை தான் நாங்கள் பாடினோம். அதிமுகதான் உருவாக்கி வெளியிட்டது.

அவதூராக பேசுவதற்கு பிறப்பிடமே திமுக கட்சி தான். கர்மவீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் எனும் பேசியவர் கருணாநிதி. எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என திமுகவினர் பேசிய  உள்ள வரலாறு உண்டு. திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் பெண்களை இழிவு படுத்தி உள்ளனர்.

சண்டாளன் என்ற வார்த்தை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை. சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. சண்டால் என்ற ஒரு சமூகம் இருப்பது எனக்கு தெரியாது  என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader Seaman press meet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->