தஞ்சாவூர்: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் ரயில் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் (85). இவர் நேற்று காலை தஞ்சை வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். 

அப்போது அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த ரயில் திடீரென ராஜாங்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து ராஜாங்கம் இறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள், இதுகுறித்து தஞ்சை ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த ராஜாங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oldman killed train collision in Thanjavur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->