ஓணம் பண்டிகை.. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஓணம் இந்தியாவின் தென் தமிழக பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். அதிலும் குறிப்பாக கேரளாவில் பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளாவில் ஓணம் முக்கிய பண்டிகை என்பதால் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஓணம் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை, கோவை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும், ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஓணம் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Onam festival august 29 holiday to kanniyakumari district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->