மறைந்த தனது தாயாரின் அஸ்தியை, கங்கையில் கரைத்தார் ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு 95 வயதாகுவதால் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலம் சீரானதை தொடர்ந்து தேனியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தனது தாயாரை பார்க்க தேனி விரைந்தார். 

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். 

இந்த நிலையில் தனது தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக ஓபிஎஸ் மதுரையில் இருந்து சென்னை வழியாக வாரணாசிக்கு புறப்பட்டு சென்ற நிலையில் இன்று தனது தாயாரின் அஸ்தியை கங்கை நதி கரையில் கரைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS dissolved the ashes of his deceased mother in the Ganga


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->