பழனி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனி காரமடை பகுதியில் லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் லோகேஷ் பாண்டியன் என்பவர் இன்று பலியாகி உள்ளார்.

இந்த விபத்து குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி மாணவனும் அவரது தாயாரும் லாரி மீது விழுந்துள்ளனர்.

இதில், சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவன் லோகேஷ் பாண்டியன் உயிரிழந்தார். 

படுகாயம் அடைந்த தாய் யமுனாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Palazhi Accident School Student Death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->