#கோவை : 10ஆம் வகுப்பு மாணவிக்கு பலமுறை பாலியல் தொல்லை - பெரியப்பா கைது - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரியப்பாவை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவி. இவர் பள்ளி விடுமுறை என்பதால், தனியார் மில்லியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் 52 வயதான பெரியப்பா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், பெரியப்பா வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி, தம்பி மகள் என்றும் பார்க்காமல் மாணவிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வீட்டிற்குச் சென்ற மாணவி இதுகுறித்து தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமையின் தாய், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சட்டத்தின் கீழ் மாணவியின் பெரியப்பாவை கைது செய்தனர். பின்பு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Periyappa arrested for sexually harassing a 10 th class girl in kovai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->