தனி மாவட்டமாக உருவாகிறதா பழனி? - வெளியானது முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகவுள்ளது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு முன்பு 13 மாவட்டங்கள் தான் இருந்தது. அதாவது, சென்னை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, சேலம், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் தான் இருந்தன.

இதையடுத்து கடந்த 1966ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரியை பிரித்ததே வரலாற்றின் முதல் மாவட்ட பிரிவாகப் பார்க்கப்படுகிறது. அப்போது, சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் உள்ளிட்ட வட்டங்கள் உள்ளடக்கிய பகுதி தருமபுரி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 

அதேபோல், சேலத்தில் இருந்து ஆத்தூரை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், திண்டுக்கல்லில் இருந்து பழனியை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது. அதேபோல், கோவை மற்றும் திருப்பூரை பிரித்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென்றும், ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபிச்செட்டிப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன. 

இந்த நிலையில், புதிய மாவட்டம் பிரிப்பது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோல், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் கொடைக்கானலை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரித்து பழனியுடன் இணைக்கக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

palani convert new district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->