வானகரம்: சாலையோரத்தில் வாலிபர் மர்ம மரணம்.! போலீசார் தீவிர விசாரணை.!
Police investigation for Mysterious death of a young man on the roadside in vanagaram
வானகரத்தில் வாலிபர் மர்மமான முறையில் சாலை ஓரத்தில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வானகரம் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே சுமார் 40 வயதுமதிக்கதக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? யாராவது கொலை செய்து உடலை சாலையில் வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் இறந்த வாலிபரை அடையாளம் காண, வானகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்த்தில் மாயமானவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு, வருகின்றனர்.
English Summary
Police investigation for Mysterious death of a young man on the roadside in vanagaram