சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தக் குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரவுடி காக்காதோப்பு பாலாஜி சென்னை புளியந்தோப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காக்காதோப்பு பாலாஜியை பிடிக்க முயற்சித்துள்ளனர். 

ஆனால், அவர் போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் காக்காதோப்பு பாலாஜி மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் காக்காதோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக அருண் நியமிக்கப்பட்டபின் நடைபெறும் 2வது என்கவுண்ட்டர் இதுவாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

popular rowdy kakka thoppu balaji encounter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->