பிரபல சின்னத்திரை இயக்குநர் ஓ.என் ரத்தினத்தின் மனைவி தற்கொலை - Seithipunal
Seithipunal


பிரபல சின்னத்திரை இயக்குநர் ஓ.என் ரத்தினத்தின் மனைவி தற்கொலை

சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களான நடிகை ராதிகா சரத்குமார் நடித்த ‘வாணி ராணி’, ‘பாண்டவர் இல்லம்’, ‘பிரியமான தோழி’, ‘செவ்வந்தி’ உள்ளிட்ட  சீரியல்களை இயக்கியவர் ஓ.என். ரத்னம். குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவருடைய சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும்.

இயக்குநர் ஓ.என். ரத்னத்தின் மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தற்போது பள்ளி விடுமுறைக்காக பொள்ளாச்சியில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், தம்பதியினருக்கிடையே சொத்து மற்றும் தொழில் தொடங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் படி நேற்று இரவும் இருவருக்குமிடையே தகராறு நடந்துள்ளது. அப்போது ரத்னம் மனைவியை அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீஸார் பிரியாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

popular serial director ON rathnam wife sucide in chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->