மதுபோதையில் ரகளை செய்த தனியார் பேருந்து நடத்துனர் - திருச்சி பேருந்து நிலையத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மதுபானக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், மது போதையில் மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து பொதுமக்களிடம் ரகளை செய்து கொண்டிருந்தார். அத்துடன் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டும் இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்தார். ஆனால், அந்த வாலிபர் அங்கிருந்து செல்லாமல் போலீசாரின் கைகளைத் தட்டி விட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து தர, தரவென இழுத்து சென்று சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்று விட்டனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனியார் பேருந்து நடத்துனர் என்பதும், மது போதையில் ரகளை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் எச்சரித்ததுடன், போதையை தெளியவைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private bus conductor drink alcohol and fight trichy bus stand


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->