காருக்குள் 5 சடலங்கள்! புதுக்கோட்டையில் பயங்கரம்! கொலையா? கூட்டு தற்கொலையா?!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் பகுதியில் காருக்குள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமணசமுத்திரம் பகுதியில், சேலம் மாவட்ட பதிவெண் கொண்ட கார் வெகு நேரமாக நின்றுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் உள்ளே பார்த்த போது, 5 பேர் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தகவல் கிடைத்து வந்த போலீசார், 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேரின் சடலத்தையோ மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்த 5 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்தனரா? இல்லை விஷம் வைத்து கொலை செய்யப்பட்டார்களா? என்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai car 5 people mystery death police investigation 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->