புதுக்கோட்டை | மனைவிக்கு மாந்திரீகம் செய்த கணவன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கடத்திச் சென்று சென்னையில் நடுத்தெருவில் விட்டு சென்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்:

புதுக்கோட்டை, சந்தைப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இவரை கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மாரிமுத்து தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். 

இதனால் அந்த பெண் திருமணம் ஆகி நான்கு மாதத்தில் மாரிமுத்துவை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அந்த பெண்ணை மாரிமுத்து தனது நண்பர்களுடன் காரில் கடத்தி சென்றுள்ளார். 

இது குறித்து புகாரின் பெயரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னையில் இருந்த பெண்ணை போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். 

விசாரணையில் மாரிமுத்து தன்னை மயக்கம் அடைய செய்து, இராமநாதபுர தர்காவில் மாந்திரீகம் செய்ததுடன் சென்னை தர்காவில் பூஜை செய்து, பின்னர் நடுரோட்டில் தன்னை விட்டு விட்டு சென்றதாக தெரிவித்தார். தப்பி ஓடிய மாரிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai husband bewitched wife shocking information


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->