மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை - ராகுல் காந்தி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


ரயில் விபத்துகளிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கவரப்பேட்டை அருகே மைசூரு - தர்பங்கா பயணிகள் ரயில் சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது கடந்த ஆண்டு ஒடிசா பாலசோரில் நடந்த ரயில் விபத்து போன்றது.

பல விபத்துகளில் பல்வேறு உயிர்களை பலிகொடுத்தும் இன்னும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை. இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த அரசு விழித்துக்கொள்ளும் முன் அழிக்கப்படுமோ? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, ராட்சத கிரேன்கள், நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் கொண்டு தண்டவாளங்களை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பெரிய வடிவிலான மாமல்லன் ராட்சத கிரேன் உதவியுடன் சேதமான பெட்டிகளை அப்புறப்படுத்தி சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் பணிகள் நடைபெறுவது சற்று தாமதமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahulgandhi BJP Congress Kavcarapettai Train Accident


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->