தமிழகத்தில் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கு எதிரொலி! - Seithipunal
Seithipunal


இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு திருபுவனம் அடுத்த மேலத்தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்த பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான ராமலிங்கம், மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

இந்நிலையில், ராமலிங்கம் படுகொலை வழக்கு தொடர்பாக, தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் இல்லங்களில்  என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 

கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாமக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க என்ஐஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramalingam Murder case NIA search in Tamilnadu 25 place


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->