கைது செய்த மாற்றுத் திறனாளிகளை உடனே விடுவித்திடுக..! - Seithipunal
Seithipunal


மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது, இன்று ( 14.12.2021 ) தமிழ் நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு , தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை , தங்களுடைய குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய போதவில்லை என்றும் , எனவே , அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று , தமிழகத்திலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த திரு . ஸ்டாலின் அவர்கள் , மாற்றுத் திறனாளிகளாகிய தங்களை சந்தித்தபோது , தான் முதலமைச்சராக பதவியேற்றவுடன் உங்களது அனைத்துக் கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததை நினைவுகூர்ந்த மாற்றுத் திறனாளிகள் , தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி இன்று , மாநிலம் முழுவதும் சுமார் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருவதாகக் கூறினர் .

பெயரளவில் மாற்றுத் திறனாளிகள் துறையை தன்வசம் வைத்துள்ள இந்த விடியா அரசின் முதலமைச்சர் , மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் மாற்றுத் திறனாளிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட மனமில்லாமல் , அவர்களை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது . 2 அவர்களது குறைந்தபட்ச கோரிக்கையான , தமிழகத்திலும் , மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ .1,000 / - மாதாந்திர உதவித் தொகையை , அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று , குறைந்தபட்சம் ரூ . 3,000 / -ஆகவும் , கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ . 5,000 / - ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுதான் .

இக்கோரிக்கையினை எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது திரு . ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் , பதவியேற்று 7 மாதங்கள் ஆனபொழுதும் , இன்னும் இதை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் மாற்றுத் திறனாளிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது , ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டினர் .

இவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணராத இந்த திமுக அரசு , அவர்களை அடக்கி ஒடுக்கிவிடும் எண்ணத்துடன் , அமைதியான வழியில் மாநிலம் முழுவதும் போராடிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்திருப்பது , ஆளும் அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது . எனவே , கைது செய்யப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்றும் ; அவர்களை நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றும் , இந்த விடியா அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்   என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Release the arrested alternatives immediately AIADMK statement


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->