சென்னையில் ரெட் அலர்ட் - விமான நிறுவனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!
restrictions to flight comapanies forred alart
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மிக அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு, விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, ஓடுபாதை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் தேங்காதபடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவையில் மாற்றம் இருப்பின், உடனடியாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான சேவை குறித்த தகவல்களை, அந்தந்த நிறுவன இணையதளத்தில் உறுதி செய்துகொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விமான சேவைகளில் பெரிய மாற்றம் இருப்பின் சமுக வலைத்தளம் வழியாக தகவல்கள் வழங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
restrictions to flight comapanies forred alart