வெளுக்க போகும் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழையும் நாளை மறுநாள் அதி கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கையை எடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and college holiday for rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->