கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 சதவீதம் குறைந்துள்ள சாலை விபத்து மரணங்கள்..! ..!
Road accident fatalities in Tamil Nadu have decreased by 15 percent in the last 10 years
கடந்த பத்தாண்டுகளில் (கொரோனா காலங்களைத் தவிர்த்து) தமிழ்நாட்டில் சாலை விபத்து மரணங்கள் குறைவாக பதிவாகியுள்ளன.
2025-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் சாலை விபத்து மரணங்களில் 15% குறைவு பதிவாகியுள்ளது. அத்துடன், 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,864 மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 2025 இல் 4136 மரணங்களே பதிவாகியுள்ளன.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், போக்குவரத்து ஓட்டத்தையும் சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக, தடுப்பு நடவடிக்கைகள், அவசர சேவைகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய மாற்றத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இம்முயற்சிகள் 15% உயிரிழப்புகளையும், மாரண விபத்துகளையும் குறைத்துள்ளமை புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பாதுகாப்பான சாலை பயணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள். கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் நடத்தப்பட்டன.
இதில் அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் நேரடி துண்டுப்பிரசுரம் வழங்குதல், வணிக வாகன ஓட்டுநர்களுக்கான குறியிடப்பட்ட பிரச்சாரங்கள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் இந்த சாலை விபத்துக்கள் குறைந்தமைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Road accident fatalities in Tamil Nadu have decreased by 15 percent in the last 10 years