பழனியில் இன்று முதல் ரோப்கார் சேவை ரத்து!..கோவில் நிர்வாகம் பரபரப்பு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திண்டுக்கல் மாவட்டம், "பழனி முருகன் கோவில்" முன்றாவது படை வீடு ஆகும். இது பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும்.

மேலும்  மலை உச்சியில் வீற்றிருக்கும் பழனியாண்டவரை பக்தர்கள் தரிசிப்பதற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று வர ரோப் கார், மின்இழுவை ரயில் சேவைகளும் உள்ளன.

தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் சேவை இயக்கப்படுகிறது. இதில் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதிசெய்யும் வகையில், கோயில் நிர்வாகம் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.

அந்தவகையில், இந்த ஆண்டு பழனி முருகன் கோவில் ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக  இன்று முதல் 40 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்பட உள்ளதாகவும்,  எனவே பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவில் சென்று வரலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ropecar service canceled in palani from today temple administration sensational announcement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->