16 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடி கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

ஆனால் சிறுமி எங்க தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக சிறுமியை தேடி வந்தனர். மேலும் இது குறித்து விசாரணையில் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழகிய சிறுமி, அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த செல்போனின் சிக்னல் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார், சோதனை மேற்கொண்டதில் சிறுமி அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சிறுமியை கடத்திச் சென்றது கருப்பாயூரணியை சேர்ந்த கரண் (25) என்பதும், ரவுடியா வளம் வந்து இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து சம்பவத்தன்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, வீட்டிலிருந்து வெளியூர் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த காரனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy arrested for raping 16 year old girl in madurai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->