கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.. ஏ.டி.எம் உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை ‌!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குருபரம்பள்ளி சிப்காட் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மில் நேற்று மாலை ஊழியர்கள் பணத்தை நிரப்பினர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் கட்டிட உரிமையாளருக்கு தகவல் வந்ததை அடுத்து வந்து பார்த்தபோது இயந்திரம் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 10 லட்சத்திற்கு அதிகமான பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. 

ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதில் சுமார் மூன்று மணி அளவில் காரில் வந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவை அடித்து விட்டு வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேலான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 10 lakhs stolen at ATM in Krishnagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->