நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய புள்ளி விலகல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கூட்டணி இல்லாத தனித்து செயல்படும் கட்சியான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.

கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறி அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகினார்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வந்த இளவஞ்சி கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை  குற்றம் சாட்டி கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இப்படி அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

salem ntk district secretary resignation from party


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->