சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்! வழக்கிலிருந்து மொத்தமாக விலகிய நீதிபதிகள்! - Seithipunal
Seithipunal


சவுக்கு சங்கரின் ஆட்புணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இதனை எதிர்த்து அவரின் தாயார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கின் போது உயர்நீதிமன்ற அமர்வு குறித்து தமிழக அரசு தரப்பில் சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் எம் எம் எஸ் ரமேஷ் சுந்தர் மோகன் அமர்வு இந்த வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்ற விசாரணையில் உயர் நீதிமன்ற அமர்வு குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கருத்துக்கு பின் இந்த வழக்கை விசாரணை செய்வது சரியாக இருக்காது.

எனவே இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar case chennai HC Judge


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->