நீதிபதி கேட்ட கேள்வி - சம்மதம் சொன்ன சவுக்கு சங்கர்! அதிரடி உத்தரவிட்ட நீதிபதி! - Seithipunal
Seithipunal


கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இரண்டு நாள் போலீஸ்காவல் வழங்கி மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கரை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க கூறிய மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் மற்றும் அவரின் உதவியாளர் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், சவுக்கு சங்கரை போலீஸ்காவலில் எடுத்து விசாரணை செய்ய, மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தேனி மாவட்ட காவல் துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று காலை சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கருக்கு முழு உடல் பரிசோதனை செய்து, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து அவருக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி அவர்கள், உங்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய சம்மதமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சவுக்கு சங்கர், எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இரண்டு நாள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்/

மேலும், சவுக்கு சங்கரை மூன்று வேளை அவரது வழக்கறிஞர் சந்திக்கவும் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku shankar case madurai court order may 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->