பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


கூடலூர், பந்தலூர் தாலுகாவில் கனமழை காரணமாக பள்ளிக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 3-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன் படி, தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், கூடலூர், பந்தலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் மிக அதிகனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், மோயார் உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக நீலகிரியில் கூடலூர் மற்றும் பந்தலூரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and college holiday in koodalur and pandalur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->