விடிய விடிய பெய்த மழை - நீலகிரியில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
school leave 4 taluka in nilagiri districts for rain
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்தக் கனமழை காரணமாக சமீப நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நீலகிரியின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
English Summary
school leave 4 taluka in nilagiri districts for rain