"சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களை அரசே நடத்தனும்." சீமான் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "2013 ஆம் ஆண்டில் ஆட்டோ மீட்டருக்கான கட்டண சீரமைப்பு நடந்தது. இன்று வரை அதே மீட்டர் கட்டணத்திற்கு எப்படி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்ட முடியும். அவர்கள் பிழைக்க வழியில்லை. பலரும், வட இந்தியர்களுக்கு ஆதரவாக பேசும் போது எங்க ஆளுங்களையும் ஐயோ பாவம் என கூறுங்கள்.

லிட்டருக்கு ரூ.103 டீசல் மற்றும் பெட்ரோல் ஏறிய பின் அதே கட்டணத்துக்கு எங்களால் இன்னும் ஆட்டோ ஓட்டுவது முடியாது. இந்த அரசு டாஸ்மாக்கை மட்டுமே, நம்பி இருக்கின்ற இந்த அரசாங்கம் சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களை நடத்தி, முறைப்படுத்தினால் வருவாய் மற்றும் வளம் அதிகரிக்கும்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman request to Government should run Zomato, Swiggy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->