செந்தில் பாலாஜி வழக்கில், அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உத்தரவை தள்ளி வைக்க கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

புதிதாக அவர் தகவல் செய்துள்ள அந்த மனுவில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள போக்குவரத்து துறை வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்யப்பட்டதாக தொடர்பட்ட வழக்கில் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலவையில் உள்ளது.

எனவே, கரூர் வங்கி கணக்கு ஆவணங்களை கோரி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையிட செய்து உள்ளேன். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து இருந்து விடுவிக்க கோரிய வழக்கில் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும்.

இந்த நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால், விடுவிக்கப்பட்ட ஆவணங்களை தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்த புதிய மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது வரை தங்களுக்கு வங்கி தொடர்பான விடுவிக்கப்பட்ட ஆவணங்களை வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இந்த மனு மீதான உத்தரவை வருகின்ற ஜூலை எட்டாம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கரூர் வங்கிக் கிளையின் கடிதம் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜிக்கு வழங்க அமலாக்க துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்க கோரிய வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji ED case Chennai High court July


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->