செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ்: நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் ஜாமின் வழக்கு! - Seithipunal
Seithipunal


நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம்,  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அன்று இரவே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட, அடுத்த சில வாரங்களில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 

சிகிச்சைக்கு பின் கடந்த ஒரு வருடமாக புழல் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு, திடீரென நெஞ்சுவலி நேற்று முன்தினம் மதியம் ஏற்பட்ட, சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு வருகின்ற 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி உடல் நல குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், இதனை ஏற்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வேலைக்கு பணம் பொற்றதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை நாளை 3 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji Chennai Hospital Discharge


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->