அதிகாலையில் பயங்கரம்... மரப் பட்டறையில் திடீர் தீ விபத்து! தொழில் போட்டி காரணமா? அதிர்ச்சியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் உள்ள நவீன மர இழைப்பு பட்டறையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தேக்கு மரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. 

சிவகங்கை, குண்டூரணி பகுதியில் உள்ள சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான நவீன மரப்பட்டறை தொழிற்சாலையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். மர வேலைப்பாடுகளை நேர்த்தியாக வடிவமைப்பதில் புது வகையான நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென பட்டறையில் தீப்பிடித்து வேகமாக எரிய தொடங்கியதில் அனைத்து தேக்கு மரங்களும் இயந்திரங்களும் முற்றிலும் எரிந்து செய்தமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீய முழுமையாக அமைத்தனர். இருப்பினும் மரப்பட்டறை முழுவதும் எரிந்து சாம்பலானது. 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மின் கசிவு காரணமாக அல்லது வேறு தொழில் போட்டியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மரப்பட்டறையில் திடீரென அதிகாலை தீப்பிடித்து எறிந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai wood workshop fire accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->