தூத்துக்குடி || சொகுசுக்காரில் கடத்தப்பட்ட கஞ்சா - 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி || சொகுசுக்காரில் கடத்தப்பட்ட கஞ்சா - 6 பேர் கைது.!

தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிரமாகி செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் தூத்துக்குடி - எட்டையாபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சொகுசு கார்களை வழி மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் மூட்டைகளில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் காரில் வந்த 6 பேரை மடக்கிப் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த தகவலின் படி போலீசார் மேலும் 10 பேரை பிடித்து கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மீண்டும் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகே கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six peoples arrested for drugs kidnape in thoothukudi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->