ஈரோடு இடைத் தேர்தல் - வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.!
erode election work fast
நாளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொகுதியை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து, நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 53 பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே வாக்குப்பதிவுக்காக நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.