இனி ஆயுள் தண்டனை! தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய சட்டத்திருத்தம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024 அமலுக்கு வந்ததாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மதுவிலக்கு திருத்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது அந்த சட்டம் திருத்தப்பட்ட அந்த சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்ததாக முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செய்தியும், பின்னணியும்:

கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 229 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில் சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த கள்ளச்சாராய மரண வழக்கை சிவிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 29ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்து இருந்தார்.

 இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024 அமலுக்கு வந்ததாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spurious Liquor Law TN Assembly  CM MK Stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->