இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்! தமிழக மீனவர்களை இரும்புகம்பியால் தாக்கி வலைகள் பறிப்பு! - Seithipunal
Seithipunal


கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்று லட்சம் மதிப்புள்ள வலைகளை திருடி சென்றதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ராஜேஷ், பன்னீர்செல்வம், வேல்முருகன் ஆகிய நான்கு பேர் சந்திரஹாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கோடியக்கரைக்கு தென்கிழகே 15 மைல் தொலைவில் இரவு நேரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நேரத்தில் அப்போது அந்த வழியாக இரண்டு படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்ததாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்களை கண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர்  தமிழக மீனவர்கள் விசைப்படகை  சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இரும்பு பைப்புகளால் நான்கு தமிழகம் மீனவர்களை தாக்கியது மட்டுமல்லாமல் அவர்கள் படகில் வைத்திருந்த 3 லட்சம் மதிப்பிலான  வலைகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்த தமிழக மீனவர்கள் நேற்று மதியம் ஆறுகாட்டுதுறை வந்து கிராம பஞ்சாயத்தாரிடம் இது குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் படுகாயம் அடைந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களும் அருகில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த பத்து நாட்களில் மட்டும் மூன்று முறை வேதாரண்யம் மீனவர்களை தாக்கியது மட்டுமில்லாமல் இதுவரை 10 லட்சம் மதிப்பில் மீனவர்களின் உடைமைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் மீனவர்கள் மத்தியில் கடற் கொள்ளையர்கள் குறித்த பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan pirates attack Vedaranyam fishermen and snatch nets worth three lakhs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->