செல்போனின் பேசியபடியே தண்டவாளத்தை கடந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


செல்போன் பேசியடியே சென்ற மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன்  ஜெகன் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.  சம்பவதன்று, கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது , அங்குள்ள தண்டவாளத்தை  செல்போன் பேசியப்படியே கடக்க முயன்றார்.  அப்போது, எதிர்பாராத  விதமாக திருநெல்வேலியில் இருந்து தாதர் நோக்கி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர்  விசாரணை மேற்கொன்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student Death in Dindugal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->