சொன்னபடி நாளை போராட்டம் நடக்கும்! தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி - டிட்டோஜாக் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10-ந்தேதி) நடத்த உள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29-ந்தேதி, 30-ந்தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தொடர் கோட்டை முற்றுகை போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 6-ந்தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை சுமூக மாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளி யிடபப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர் மட்டக் குழு, டிட்டோஜாக்-கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு நாளை (10-ந்தேதி) அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைப்பெரும்.

வருகிற 29, 30, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu teachers protest Titojak 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->