சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்! இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட், 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளது.

மேலும் இது குறித்த அறிவிப்பில், இன்று திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அக்டோபர் 15 ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலாட் எடுக்கப்பட்டுள்ளது. 

நாளை தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதன்படி திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 13-ஆம் தேதி கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Chennai Heavy Rain Alert


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->