தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu next 2days heavy rain
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu next 2days heavy rain