5 நாட்களுக்கு முன்பே ஆரம்பம்! சென்னை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

வருகின்ற அக்டோபர் 15, 16 ஆம் தேதி வடக்கிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளில் அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். வழக்கமாக அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கக்கூடிய வடகிழக்கு பருவமழை, ஐந்து நாட்களுக்கு முன்பாகவே இந்த வருடம் தொடங்க வாய்ப்புள்ளது.

மேலும் ஏழு நாட்களுக்கு முன்பு அல்லது ஏழு நாட்களுக்கு பின்பு வடகிழக்க பருவமழை தொடங்கினாலும் அதை இயல்புநிலை என்றே கருதப்படும்.

தென்மேற்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில், வருகின்ற 16ஆம் தேதி மிக அதி கனமழைக்கான "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report Rain alert 13 10 2024


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->