அத்துமீறும் ரவுடிகளை வேரறுக்க புதிய சட்டம்.. தமிழக காவல்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


ரவுடிகள் தொடர்பான வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், " ரவுடிகளால் காவல் துறையினர் பாதிக்கப்ட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், தூத்துக்குடியில் காவல் அதிகாரி இறந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? " என்றும் கேள்வியை எழுப்பினர். 

மேலும், ரவுடிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன என்று தமிழக டி.ஜி.பி பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இன்று விசாரணைக்கு வருகையில், தமிழக அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மற்றும் தமிழக காவல்துறை டி.ஜி.பி ரவுடிகளை ஒழிக்க தனி சட்டம் இயற்றப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இந்த சட்ட மசோதா எப்போது சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பான விபரங்களை அடுத்த விசாரணையின் போது பதிவு செய்ய வேண்டும் என்று கூறி, தீர்ப்பு தேதியை அறிவிக்காமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Police Plan to Implement bill about Rowdies taking down


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->