தமிழக பட்ஜெட் - வெளிமாநிலங்களில் தமிழ் புத்தக திருவிழா.! - Seithipunal
Seithipunal


நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

* உலகப்பொதுமறையான திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடியும், 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்படும்.

* ஓலை சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.

* இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

* இனி மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் தமிழ் புத்தக திருவிழா நடத்தப்படும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamizh book festival in other state minister thangam thennarasu info


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->