திடீரென பச்சை நிறத்தில் வாந்தி, பேதி! ஒருவர் பலி! 10 நாட்களாக 10 பேருக்கு! தஞ்சையில் புதிய நோய் தொற்றா?! - Seithipunal
Seithipunal


தஞ்சை அருகே கடந்த 10 நாட்களாக சுமார் 10 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், லட்சுமிபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலைகள், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முதியவரின் மரணம் லட்சுமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாக தெரிகிறது.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து தீவிர ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் பச்சை நிறத்தில் வாந்தி எடுத்ததாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tanjore Lakshmi puram people admited in hospitalised


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->