நள்ளிரவில் வழக்கறிஞர் குமாஸ்தா வெட்டி படுகொலை! மர்ம கும்பலின் ஆவேச செயல்.! தஞ்சையில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர், வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் அற்புதம் (வயது 70) இவர் வழக்கறிஞர் குமஸ்தாவாக பணியாற்றினார். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் வந்த மர்ம கும்பல் அவரை அறிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. 

இதனை தொடர்ந்து அற்புதம் மர்ம கும்பலிடம் இருந்து தப்பி வடக்கு வாசல் நான்கு சாலை நோக்கி ஓடி உள்ளார். இருப்பினும் அவரை விடாமல் துரத்திய மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. 

இதை பார்த்த அற்புதத்தின் மனைவி ஓடி வந்து மர்ம நபர்களை தடுத்துள்ளார். இதனால் அவரையும் வெட்டி பின்னர், அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அற்புதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படுகாயமடைந்த நிலையில் இருந்த அற்புதத்தின் மனைவியையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tanjore Lawyer clerk killed issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->