நாளை முதல் 3 நாளைக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நாளை முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதார்கள் மணிமண்டபத்தில், நாளை விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. 

மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் சார்பாக வரும் 27-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள மருது சகோதார்கள் நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது.

இந்நிலையில், மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு, நாளை முதல் (27ஆம் தேதி) முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து டாஸ்மார்க் மது கடைகளையும், மன மகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்ட அனைத்தையும் மூட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல், மதுரை மாவட்டம் முழுவதும், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், மானாமதுரை, பூவந்தி, திருப்பாச்சேத்தி, மதகுபட்டி ஆகிய பகுதிகளில், மருது பாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள், டாஸ்மாக் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tasmac Shop closed in madurai sivagangai viruthunagar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->