ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்.. பள்ளி சிறுவர்களை கழிப்பறையை கழுவ வைத்த ஆசிரியர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவர்களை கழிவறையை கழுவ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள முள்ளம்பாடியில் அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு முதலில் வரும் சிறுவர், சிறுமிகளை கழிவறையை சுத்தம் செய்ய அங்கு உள்ள ஆசிரியர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கே ஆய்வுக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தினர். பள்ளி சிறுவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher made the school boys wash the toilet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->